கோவை மாநகர சுகாதார மையத்தில் பூட்டை உடைத்து துணிகர திருட்டு.!!

கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமலை செட்டிபாளையத்தில் மாநகர சுகாதார மையம் (அர்பன்ஹெல்த் வெல்னஸ் சென்டர்)உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விரைவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்யூட்டர்,மானிட்டர் கீபோர்ட் ,மவுஸ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுகாதார இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..