நடுரோட்டில் மனைவி, மாமியாருக்கு அடி உதை – கணவன், மாமனார் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த செல்லாண்டி கவுண்டனூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 26) இவரது மனைவி ரேவதி ( வயது 25 ) இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை .செல்வகுமார் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்கு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ரேவதி கடந்த 27ஆம் தேதி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 28ஆம் தேதி அவரைத் தேடி கணவர் செல்வகுமார் அங்கு சென்றார். அப்போது ரேவதி தனது தாயார் கலாவதியுடன் அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்து செல்வகுமார் அவர்களை வழிமறித்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார் . இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது .இது குறித்து வடக்கி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதியின் கணவர் செல்வகுமார் (வயது 26) மாமனார் ஆறுச்சாமி ( வயது 50) ஆகியோரை கைது செய்தனர். மாமியார் கனகரத்தினம் உறவினர் சரஸ்வதி ஆகியோரை தேடி வருகிறார்கள்.