கோவை சிறையில் என்ன நடக்கிறது… கைதி அறையில் கஞ்சா சிக்கியது..!

கோவை மத்திய சிறையில் 1700 க்கு மேற்பட்ட தண்டனை,விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 3 -வது பிளாக்கில் அறை ( எண் 23 ) அடைக்கப்பட்டுள்ள ஜெரால்டு ஆரோக்கியநாதன் என்ற சிறைவாசியின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை போட்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த ஒரு கிராம் கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் ஜெயிலர் மாரிமுத்து புகார் செய்தார் .போலீசார் கைதி ஜெரால்டு ஆரோக்கியநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.