மோடி எங்களுக்கு வேண்டும்… இதைத்தான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்- பாகிஸ்தான் இளைஞர் உணர்ச்சிகர பேச்சு..!

ஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‘இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.250க்கு விற்பதனையாகிறது. கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.700 முதல் 800 வரை உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் வேதனையடைந்துள்ளனர்.இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபரான சனா அம்ஜத் என்பவர், ஒரு இளைஞரிடம், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்கிறார்.
அப்போது அந்நபர் ஷெபாஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கியதுடன், ‘இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.பிரதமர் மோடி அந்த யூடியூபரிடம் பாக்., இளைஞர் பேசியுள்ளதாவது: பாகிஸ்தானில் பிறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க விரும்புகிறேன். அப்போதுதான் தக்காளியை கிலோ ரூ.20க்கும், கோழிக்கறியை கிலோ ரூ.150க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்கும் வாங்குவோம்.

எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இங்கு இஸ்லாத்தை நிறுவ முடியவில்லை. இந்திய பிரதமர் மோடி, நம்மை விட சிறந்தவர். அங்குள்ள மக்கள் மோடியை மதிக்கின்றனர், அவரை பின்தொடர்கின்றனர்.எங்களுக்கு நரேந்திர மோடி கிடைத்தால், நவாஸ் ஷெரீப்போ, பெனசிரோ, இம்ரானோ, முஷரப்போ தேவைப்படாது. எங்களுக்கு தேவை நரேந்திர மோடி மட்டுமே.

அவரால் மட்டுமே நாட்டில் நிலவும் மோசமான நிலைமையை சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது. மோடியின் ஆட்சியின் கீழ் நான் வாழ தயார். அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியர்களுக்கு தக்காளி, சிக்கன் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. மோடியை நமக்கு (பாகிஸ்தானியர்களுக்கு) கொடுத்து நம் நாட்டை ஆள வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கண்ணீருடன் அவர் பேசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.