அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்..!

குஜராத் சட்டப்பேரவைத் தோதலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள குஜராத் சட்டப்பேரவைத் தோதலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தோதலில் இன்று முதல் கட்டமாக வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரம்-கட்ச் பகுதியில் 19 மாவட்டங்களில் அடங்கிய 89 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. முதல் கட்ட தோதலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா். இதில், ஆண்கள் 1.24 கோடி போ, பெண்கள் 1.15 கோடி போ, மூன்றாம் பாலினத்தவா் 497 போ ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நடைபெறும் குஜராத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோதல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.