அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக் குண்டம் திருவிழா

அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி  வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா இக்கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆடிக்குண்டம் திருவிழா கடந்த ஜூலை 19 ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஆடிக்குண்டம் திருவிழா இலட்சார்ச்சனை, கிராம சாந்தியும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆடிக்குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்சியானது  அதிகாலை 3.00 மணிக்கு அம்மன் அழைப்பு, பின்னர் பல்வேறு பூஜைகளுக்கு பின்னர் சிம்ம வாகனத்தில் கோவிலை வந்த பின்பு குண்டத்திற்கு வந்தது. பின்பு, சரியாக காலை 6.00 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறாது

முதலில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு தலைமை பூசாரி ரகுபதி குண்டம் இறங்கினர்.

அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ், கோவை முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி, தி.மு.க ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கானோர் குண்டம் இறங்கினர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் படி 500 க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்புத் துறையினர், மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், துணை ஆணையர் கைலாசமூர்த்தி செய்தனர்

இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றுச் சென்றனர்.