பியூச்சர் போன்களுக்கு யூபிஐ பேமெண்ட்: ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய சேவை.!!

டெல்லி: பியூச்சர் போன்களுக்கு யூபிஐ பேமெண்ட் சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தினார்.

இதன்மூலம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை யூபிஐ தளத்திற்குள் இணைக்க முடியும். யூபிஐ பேமெண்ட் சேவை நமது பொருளாதாரத்தில் நிதி நிலைமையை ஊக்குவிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.