மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடந்தாக புகார்: மனு அளிக்க ஐகோர்ட் அனுமதி..!!

சென்னை: மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி புகார் மனு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறி பி.புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். போலிக்கணக்கு காண்பிக்கப்பட்டு ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர் பி.புகழேந்தி குற்றசாட்டியிருந்தார்.