UKG மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் கொடுமை… பள்ளி தாளாளரின் கணவர் கொடூர செயல்..பெரும் அதிர்ச்சி சம்பவம்..

மிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் அருகே யுகேஜி மாணவி ஒருவரை பள்ளி தாளாளரின் கணவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

போளூர் அடுத்த கொங்கை சூடாமணி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்த மாணவி திடீரென உடல் குறைவாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அந்த மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்ததும் இந்த தகவல் வெளியானதும் அவர் தலைமறைவானதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருடைய செல்போன் சிக்னல் வைத்து கண்காணித்த போது அவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இருந்தது தெரிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.