தமிழ்நாட்டில் கஞ்சா விற்க அனுமதி கொடுங்கள். கொரட்டூரில் வடமாநில இளைஞர்களுக்கு கஞ்சா விற்று சிக்கிய கேரளா வாலிபர் கைது…

 

அம்பத்தூர் டிச 17

 

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா நடமாட்டம் அடியோடு ஒழித்துக்கட்ட உத்தரவிட்டிருந்தார் அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இளைஞன் வட மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களிடம் ஆந்திர மாநிலம் விஜயநகர் கஞ்சா இழுக்க இழுக்க இன்பம் தரும் கஞ்சா இந்த மாதிரி கஞ்சா வேறு எங்கும் பார்த்திருக்க மாட்டீங்க என இனிக்க இனிக்க பேசி விற்று க் கொண்டிருந்தான் அவனை இன்ஸ்பெக்டர் தனம்மாள் மடக்கி பிடித்து கைது செய்தார் அவன் வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார் அவனது பெயர் பி எஸ் அபி ஸ் வயது 24 தகப்பனார் பெயர் சுபய்ர் போக்கிஇல்லத் இல்லம் சக்கம் கண்டம் சவக் காடு

திருச்சூர் கேரள மாநிலம் அவன் போலீசாரிடம் கூறுகையில் தமிழ்நாட்டில் எனக்கு கஞ்சா விற்க அனுமதி வாங்கி கொடுங்கள் என கெஞ்சினான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனமாள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்க என்னிடமே அனுமதி கேட்கிறாயா கொள்ளை அடிக்கவும் அனுமதி கேட்பாய் போல் தெரிகிறது உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது கடுமையான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என பிரம்பை கையில் எடுக்க அம்மா என்னை அடிக்காதீங்க எனகாலில் விழுந்து கதறினான்
அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்