தொழில் அதிபரிடம் ஆசிர்வாதம் செய்வது போல நடித்து பணத்தை நைசாக திருடிய திருநங்கை கைது..!

கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தனபால் ( வயது 47 ) தொழில் அதிபர். இவர் கோவை -அவிநாசி ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார்.அப்போது அவரது காருக்கு அருகே 2 திருநங்கைகள் ஸ்கூட்டரில் வந்து பணம் கேட்டனர். உடனே அவர் தனது பர்சில் இருந்து 20 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அப்போது திருநங்கைகள் அவருக்கு ஆசிர்வாதம் செய்வது போல நடித்து அவரது சட்டை பையில் இருந்த ரூ.9 ஆயிரத்தை நைசாக திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பீளமேடு போலீசில் தனபால் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் பறித்த திருநங்கை காவியாவை (வயது 33) கைது செய்தனர். மற்றொரு திருநங்கையை தேடி வருகிறார்கள்.