கோவையில் சோகம்.. அதிவேகமாக வந்த பஸ் மோதி தந்தை, 3 வயது மகன் பரிதாப பலி – 3 பேர் படுகாயம்..

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், விவேகானந்தா நகரை சேர்ந்த அசோக்குமார் ( வயது 32) இவர் நம்பர் 2 கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுசிலா ( வயது 30) இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற மகன் உள்ளான் .இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அசோக் குமார் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகனுடன் கோவை – மேட்டுப்பாளையம் ரோடு, கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த தனியார் பஸ் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியபடி சென்றது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற பாபு மற்றும் அவரிடம் சென்று ஒருவரும் காயமடைந்தனர். அதன் பிறகும் அந்த தனியார் பஸ் வேகமாக சென்று அசோக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அசோக்குமாரும், அவரது மகன் சர்வந்தும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கணவரும் மகனும் இறந்து கிடப்பதை பார்த்து சுசிலா கதறி அழுதார். இதை அறிந்து அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இறந்த தந்தை மகனின் உடல்களை கோவையில் சோகம்.. அதிவேகமாக வந்த பஸ் மோதி தந்தை, 3 வயது மகன் பரிதாப பலி – 3 பேர் படுகாயம்..ரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சுசிலா மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பாபு அவருடன் வந்தவரும் சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.