கோவை மாநகராட்சி பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை – மேற்பார்வையாளர் மீது புகார்.!!

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 -வது வார்டில் 25 வயது பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் .இவருக்கு தூய்மை பணி மேற்பார்வையாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் அந்தப் பெண் புகார் செய்தார். இதுகுறித்து பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி புகார்களை விசாரிக்கும் குழு விசாரணை நடத்தி வருகிறது குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தூய்மை பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.