குளியல் வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த சோகம்..

கோவை அருகே உள்ள துடியலூர் ஜி என் .மில்ஸ், மணல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) | பெயிண்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ரியான் ( வயது 6)என்ற மகனும், மற்றும் மெஹானா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அவர்கள் 2 பேரும் நேற்று குளியலறையில் உள்ள வாளியில் இருந்த தண்ணீரில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வாளிக்குள் விழுந்த மெஹானாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியான் கூச்சல் போட்டான் .உடனே உறவினர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு வழியில் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்கள். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.