புதுப்பெண்ணை டார்ச்சர் செய்து கொலை மிரட்டல் – கணவர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை சுண்டக்காமுத்தூர் அம்மன் கோவில் ரோட்டை சேர்ந்தவர் நசுருதீன்.அவரது மகள் ரீமா செரின் ( வயது 21) இவருக்கும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சையத் முகமது என்பவருக்கும் 11 -6 -23 அன்று திருமணம் நடந்தது.  இந்த நிலையில் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் உட்பட 5 பேர் சேர்ந்து ரீமா செரினை டார்ச்சர் செய்து, கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து கோவை தெற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி விசாரணை நடத்தி கணவர் செய்யது முகமது, மாமனார் ஹால்டின், மாமியார் பர்வீன் பானு, உறவினர்கள் ரியாஸ் அகமது தஸ்லிமா நஸ்ரின் ஆகியோர் மீது கொலை மிரட்டல் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.