பைக்கில் கஞ்சா கடத்திய திருச்செந்தூர் வாலிபர் கைது..!

கோவை மாவட்டம் கணியூர்- மாதப்பூர் ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கருமத்தம்பட்டி போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,பைக்கும் பறிமுதல் செயப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பக்கம் உள்ள வீரபாண்டியன் பட்டணம் பிலோமி நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் ஜஸ்டின் மைக்கேல் ராஜ் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவர் தற்போது கணியூர்- மாதப்பூர் ரோட்டில் உள்ள ராமசாமி என்பவரது வசித்து வருகிறார்..