கல்லூரி மாணவரை மிரட்டிசெல்போன் – லேப்டாப் கொள்ளை. 2 பேர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் திகேஷ்குமார் (வயது 23) இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 3 -ம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அய்யப்பா நகரில் அறைஎடுத்து தங்கி உள்ளார் நேற்று இவரது அறையில் தனியாக இருந்தபோது2 பேர் உள்ளே புகுந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்த 2 லேப்டாப், 3செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.இதுகுறித்து தீகேஷ்குமார் சுந்தரபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தராபுரம்,மச்சம் பாளையம், கவுதம் ( வயது 21)குறிச்சி கமலக்கண்ணன் ( வயது 27)ஆகியோரைகைது செய்தனர். இவர்களிடமிருந்து லேப்டாப் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்களில்கமலக்கண்ணன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது.