ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: பெண் தூக்கு போட்டு தற்கொலை – போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக் காதலனும் விஷம் குடித்து உயிரிழப்பு

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: பெண் தூக்கு போட்டு தற்கொலை – போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக் காதலனும் விஷம் குடித்து உயிரிழப்பு

கோவை அடுத்து வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 34 வயது பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சலீம் அந்த பெண்ணிற்கு தெரியாமல் அவரை ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனிடையே கள்ளக் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் சலீமை சந்தித்து பேசுவதை தவிர்த்து வந்தார். இதனிடையே சலீம் தான் எடுத்த வைத்திருந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். இதை அடுத்து அவர் கடந்த 6 ம் தேதி அந்தப் பெண்ணின் அக்காவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனது கள்ளக் காதலை குறித்து எடுத்துக் கூறியுள்ளார். மேலும் தனது செல்போனில் உள்ள அவரது தங்கையின் ஆபாச புகைப்படங்களை அவரிடம் காண்பித்தார். பின்னர் தனக்கு பணம் தரவில்லை என்றால் இந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக அவரை விரட்டி விட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. இதனால் அக்காள் தனது சகோதரி செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசி உள்ளார். அப்பொழுது நடந்த சம்பவங்களை கேட்க அவளது சகோதரி திடீரென செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். மேலும் கள்ளக் காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் உறவினர்கள் இடையே அவமானம் ஏற்படும் என நினைத்து அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையாக பெண்ணின் உறவினர்கள் சலீம் பணம் கேட்டு ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியதால் தான் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே அவரது சாவுக்கு காரணம் சலீம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சலீம் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணைக்காக தன்னை தேடுவதை அறிந்த சலீம் பயத்தால் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கப் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்தனர் சிகிச்சை பலர் இன்று அவர் இறந்தார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.