திருச்சியில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா…

ஊர்கள் தோறும் தி.மு.க .100 வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுக வின் சார்பாக பெரிய கடை வீதி _ தைலா சில்க்ஸ் அருகில் நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் தலைமையில்
தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,பள்ளி கல்வி துறை அமைச்சருமான மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு கழக இரு வர்ண கொடியை ஏற்றி வைத்து கழக மூத்த முன்னோடிகள் 100 நபர்களுக்கு பொற்கிளியை வழங்கி கவுரவித்தார்கள். மேலும் அமைச்சர்கள் இருவரும் சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கு திமுக இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டு இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நாம் மாற்றிக் காட்ட வேண்டும் என்றனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் கே என் சேகரன் சபியுல்லா செந்தில் பகுதிகழகச் செயலாளர் மோகன் சிறுபான்மை பிரிவு செயலாளர் நூர் கான் மற்றும் நகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.