இபிஎஸ் எதிர்த்தற்கு இது தான் காரணம்.. உண்மையை போட்டு உடைத்த ஓபிஎஸ்.!!

திமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது.

இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணையில் இணைந்தார்.

இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், இபிஎஸ்ஐ எதிர்த்தது ஏன் என்பதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வகுத்து தந்த சட்ட விதியை நீக்குவதற்கு அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. அதுதான் நடந்தது. அதனால் தான் எதிர்த்தோம். தர்மத்த்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்ற நிலை ஏற்படும் அதனை தொண்டர்கள் அனைவரும் பெற்றுத் தருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.