தும்மினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் போட்றாங்க – முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

தும்பினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத் துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசிய முதலமைச்சர், பால் விலையை குறைத்ததால் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளதாகவும், கடந்த ஆட்சியைவிட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக, திருமணத்தை எளிமையாக நடத்துமாறு அமைச்சரிடம் தான் கூறியதாக தெரிவித்தார். எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருப்பதாகவும், தும்மினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர் எனவும் முதலமைச்சர் கூறினார்.