காரில் வைத்திருந்த நகை திருட்டு- 2 பேர் கைது..!

கோவை உக்கடம் உப்பார வீதியை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் . இவரது மகன் விக்ரம் (வயது 32) இவர் என்.எச். ரோட்டில் கார் டீலிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.. அவரது காரை நிறுத்திவிட்டு பாத்ரூம் சென்றிருந்தார் .திரும்பி வந்து பார்த்தபோது காரில் மணி பர்சில் வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் செயின் 60 கிராம் வெள்ளி கைச்செயின் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து விக்ரம் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்புக்கடை சார மேடு முகமது (வயது 31 ) மதுக்கரை ஐயப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த முகமது ஹரிஷ் ( வயது 28) ஆகியோரை கைது செய்தனர் . அவர்களிடமிருந்து பொருட்கள் மீட்கப்பட்டது..