கோவை மாஜி வங்கி அதிகாரி வீட்டில் திருட்டு..!

கோவை அருகே உள்ள கோவைபுதூர், ஆல்பா நகரை சேர்ந்தவர் டாக்டர் சேகர் . இவரது மனைவி திலகம் ( வயது 67 ) வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .கடந்த 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கணவருடன் காளப்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துக்குமார் என்பவர் திலகத்துக்கு போன் செய்து அவரது வீட்டில் இருந்து 2 பேர் வெளியே வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து திலகம் அவரது கணவருடன் அங்கு வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த வெள்ளி சாமான்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் வழக்கு பதிவு செய்து திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி ரோட்டில் உள்ள திரு. வி. க. நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் ( வயது 38 )என்பவரை கைது செய்தார். இவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது..