வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் – 5 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் வசிப்பவர் கிட்டுசாமி (வயது 73) விவசாயி . இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கிட்டுசாமி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 35) அருண்குமார் (வயது 30) பரமசிவம் (வயது 49) வேலு (வயது 45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணமும், சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.