நடுரோட்டில் கல்லூரி மாணவியை வழிமறித்து தாக்கிய இளைஞர் கைது..!

கோவை குனியமுத்தூர் திருநகர் காலனி சேர்ந்தவர் ரமணி. இவரது மகள் கார்த்திகா ஸ்ரீ (வயது 19)ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.(கம்யூட்டர் சயன்ஸ்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 19) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.. கடந்த 6 மாதமாக சஞ்சய்யிடம் கார்த்திகா  ஸ்ரீ பேசுவதில்லை .இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் நேற்று குனியமுத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார் . அப்போது கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த கார்த்திகா ஸ்ரீயை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து கார்த்திகா ஸ்ரீ குனியமுத்தூர் போலீஸ் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி சஞ்சயை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..