முதல் திருமணத்தை மறைத்து முகநூல் காதலனை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் தஞ்சம்..!

கோவை:
அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு போன் மூலமாக கோவை கீரநத்தம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபருடன் பழகி வந்தார். 2 பேரும் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இளம்பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தார். பின்னர் கோவில்பாளையத்துக்கு சென்று தனது கள்ளக்காதலனை சந்தித்தார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட கையோடு 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோவில்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் இளம்பெண்ணின் முதல் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவில்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றார். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்த இளம்பெண் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக வாலிபரை திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.