10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி .இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசூரைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27) கூலி தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு மாணவிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் அவர் அடிக்கடி மாணவியுடன் பேசி வந்துள்ளார். உறவினர் என்பதால் அந்த மாணவியும் பேசியதாக தெரிகிறது .இந்த நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இது பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். உடனே அவர்கள் மாணவியை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்பத்துக்கு தாமோதரன் தான் காரணம் என்பது தெரியவந்தது .இது குறித்த புகார் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமோதரனை நேற்று கைது செய்தனர் .அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.