நாய் கடித்து தொழிலாளி பரிதாப பலி ..

கோவை, வேலாண்டிபாளையம் ,கொண்ட சாமி நாயுடு, 2 -வது வீதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் ( வயது 45) பேப்ரிகேஷன் வேலை செய்து வந்தார் . இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இவரை தெரு நாய் கடித்தது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்காக கோவை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி சுமித்ரா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.