ஜல்லிகட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிவிட்டது தமிழக அரசு..!

ல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் மிக முக்கியமானவைகளாக, ஜல்லிக்கட்டு காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், அவ்வாறு வருபவர்களும் கொரோனா சான்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல ஜல்லிக்கட்டு பார்வையாளர் அரங்கில் 300 பெருக்கோ அல்லது மொத்த இருக்கையில் பாதி அளவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.