பிளேடால் கையை அறுத்து போதை மாத்திரை கைதி தற்கொலை முயற்சி.

கோவை தெற்கு உக்கடம், ஜி .எம். நகரை சேர்ந்தவர் அப்பாஸ், இவரது மகன் முகமது நவாஸ் (வயது 23 )டி.எம்.இ. படித்தவர் இவர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கடைவீதி சப் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது அவர் தனது இடது கையை பிளேடால் வெட்டி கொண்டார். ரத்தம் கொட்டியது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இது குறித்து கடைவீதி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் முகமது நவாஸ் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்..