மாமியார் உட்பட 2 பேருக்கு கத்திக்குத்து – மருமகன் கைது..!

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கொண்டம்பட்டி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி இவரது மனைவி காமாட்சி ( வயது 45 )இவரது மகளுக்கும்,திண்டுக்கல் மாவட்டம் பழனி, கரட்டு பிரிவை சேர்ந்த ஆறுமுகம் ( வயது 30)என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் , மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இவரது மகள் கணவரிடம் இருந்து கோபித்துக் கொண்டு கொண்டம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று மனைவி அழைக்க வந்த ஆறுமுகம் மனைவியிடம் தகராறு செய்தாராம். இதை அவரது மாமியார் காமாட்சியும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் (வயது 48) ஆகியோர் கண்டித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மருமகன் ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் காமாட்சி ஈஸ்வரன் ஆகியோரை குத்தினாராம். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இது குறித்து காமாட்சி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து மருமகன் ஆறுமுகத்தை நேற்று கைது செய்தார் . இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.