அம்பத்தூரில் நடந்த கொடூரம்… அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்த மூதாட்டி அடித்து கொன்ற பணிப்பெண்… காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா..!!

அம்பத்தூர் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள கேஜிஎஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னந்தனியாக வசித்தவர் பொன் ராசாத்தி வயது 84. இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், சென்னையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தன்னந்தனியாக வசித்து வரும் மூதாட்டி பொன் ராசாத்தியை உடனிருந்து பராமரித்துக் கொள்ள அயனாவரத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் வயது 51 என்பவள் மாதம் 12 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்து வந்தாள். உங்களை மகன்கள் தான் நியமித்துள்ளனர் . கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பொன் ராசாத்தி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தாருக்கு கன்னியம்மாள் தகவல் கொடுத்துள்ளாள் .வீட்டுக்கு வந்த மகன்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி கன்னியம்மாள் பொன் ராசாத்தி மகன்கள் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாள். இதனால் சந்தேகம் அடைந்த மகன்கள் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பொன் ராசாத்தியை வேலைக்காரி கன்னியம்மாள் கையால் அடித்தும் காலால் எட்டி உதைத்தும் சித்திரவதை செய்து உள்ளாள். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .இதுகுறித்து நொளம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கேடி கன்னியம்மாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாள். சிகிச்சை பெற்று வந்த பொன் ராசாத்தி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூதாட்டிகளே தனியாக வசிக்காதீர்கள்.. உங்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.. மகன்களோடு சேர்ந்து வாழுங்கள்.. இல்லையென்றால் நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து வாழுங்கள்.. இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!!