வால்பாறை கூடுதல் பொறுப்பு ஆணையாளராக பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் பொறுப்பேற்பு..!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து வந்த பாலு கோவைக்கு பணி உயர்வு பெற்று சென்றுவிட்டதைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடுமலைப்பேட்டை நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து வரும் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் வால்பாறை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பு ஆணையாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வால்பாறை நகராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..