உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம் சென்டரில் மூதாட்டியிடம் நூதன திருட்டு..!

கோவை : சிங்காநல்லூர்,எஸ் ஐ எச் எஸ் காலனி, பெத்தேல் நகரை சேர்ந்தவர் பழனி முருகன், அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே உள்ள ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுக்ச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி அவருக்கு உதவி செய்வதுபோல நடித்து அவரது கார்டை வாங்கினார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார்டை மாற்றி மற்றொரு ஏடிஎம் கார்டை அவருக்கு கொடுத்துவிட்டு.அவரது கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிக் கொண்டு ஓடிவிட்டார். இது குறித்து ஜெயலட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..