கோவை டாஸ்மாக் கடைக்குச் சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு..!

கோவை: கேரள மாநிலம் ,ஆலப்புழா மாவட்டம் பாவுக்கரையை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 45 )இவர் வேலை தேடி நேற்று கோவைக்கு வந்திருந்தார். பீளமேடு ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை தாக்கி கீழே பிடித்து தள்ளினார் . அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இந்த தாக்குதலில் அணில் குமார் காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.