பிறந்து 10 நாட்கள் ஆன குழந்தை இருதய அறுவை சிகிச்சைக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி..!

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 31) இவர் தமிழக வியாபாரிகள் சம்மேளன உறுப்பினராக உள்ளார் . இவரது மனைவி மீனாட்சி (வயது(29) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து. குழந்தைக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு சுமார் 5 லட்சம் வரை செலவு ஆகும் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மிகவும் ஏழ்மை குடும்பத்தை சார்ந்த முத்துராஜ் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் உதவியை நாடினார். இதற்கு தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. உடனடியாக குழந்தையின் மருத்துவ உதவிக்கு ரூ. 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக வியாபாரிகள் சம்மேளனதலைமை கமிட்டி தலைவரும்,கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான எஸ். எம் .பி.. முருகன், பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை முத்துராஜிடம் வழங்கினார். ‘இந்த நிகழ்ச்சியில் தலைமை பொதுச் செயலாளர் பி. உதயகுமார், துணைத் தலைவர் டி.சி . தேவராஜ், வடவள்ளிக்கிளை பொருளாளர் ஓய்.ஏ.சேகர், துணைத் தலைவர்கள் செல்வசிங், ராஜேந்திரன், அர்ஜுனன், துணைச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.