ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழு திடீர் சந்திப்பு..!

மிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ போலியானது என நிதியமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இந்த ஆடியோ தொடர்பாக நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜக குழுவினர் சந்தித்து, பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக புகார் அளித்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் பாஜக நிர்வாகிகள் விபி துரைசாமி, கரு. நாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.