சூலூர் காட்டூர் மாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா..!!

சூலூர் காட்டூர் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறும். சூலூர் மட்டுமல்லாது சூலூர் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் வருகை தந்து கலந்து கொள்ளக்கூடிய திருவிழாவாக அமைந்திருக்கும். இந்த ஆண்டு திருக்கோவில் திருப்பணி ஆனது துவங்கப்பட உள்ள நிலையில் பகுதி பொதுமக்கள் அனைவரும் ஊர் அபிஷேகம் செய்யும் பொருட்டு சூலூர் தையல் நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் இருந்து பால் , தீர்த்த குடங்கள் சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டூர் மாகாளியம்மனுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். முன்னதாக சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டு கலச தீர்த்த அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று வருகை தந்த மக்களுக்கும் பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது..