மது குடித்து 2 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் : மதுவில் விஷம் கலந்து கொடுத்து மாமனார் கொலை செய்த மருமகன் கைது..!

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக் காணியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58) விவசாயி .இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (வயது 56) இவரும் விவசாயி செய்து வந்தார்.இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நெகமம் அருகே பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் ரோட்டில் உள்ள துளசி தோட்டத்தில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர் .சிறிது நேரத்தில் 2பேரும் மயங்கி விழுந்தனர் .இதில் வேலுச்சாமி அதே இடத்தில் இறந்துவிட்டார் .இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மனோகரனும் இறந்தார். மது குடித்த 2 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல் கிடைத்துள்ளது .இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-மது குடித்ததில் பலியான விவசாயி மனோகரனுக்கு மாசிலாமணி (வயது 25) என்ற மகள் உள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் ( வயது 30) காதலித்து திருமணம் செய்து கொண்டார் சத்யராஜ் பாப்பம்பட்டியில் உள்ள தனியார் கோழி தீவன நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். சத்யராஜ் மாசிலாமணி தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். சத்யராஜ் தனது மாமனாருக்கு அவ்வப்போது மது வாங்கி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தை ரூ 35 லட்சத்திற்கு விற்றதும், இந்த பணத்தை வைத்து அவர் நண்பர்களுடன் மது குடித்து சந்தோஷமாக இருந்ததாக தெரிகிறது இதற்கிடையில் மாமனாரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்த சத்யராஜ் அந்த பணத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அதற்காக தனது மாமனாரை கொலை செய்ய முடிவு செய்தார். இதன் படி சத்யராஜ் மதுவை வாங்கி அதில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் இதனை அறியாத மாமனார் மனோகரன் மதுவை வாங்கிக் கொண்டு தனது உறவினரான வேலுச்சாமியுடன் சேர்ந்து மதுவை குடித்துள்ளார் . விஷம் கலந்த மதுவை குடித்ததால் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ” அந்த பகுதியில் மறைந்து இருந்த மருமகன் சத்யராஜை போலீசார் இன்று கைது செய்தனர்.அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.