கோவை ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து – ரூ.19 லட்சம் துணிகள் எரிந்து நாசம்..!

கோவை சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மனோஜ் சிதியா.இவரது மனைவி ஜெய சிதியா (வயது 49) இவர் ஒப்பணக்கார வீதியில் கடந்த 23 ஆண்டுகளாக ரெடிமேடு துணி கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 22 ஆம் தேதி நரேந்திர குமார் என்பவர் ஜெயசிதியாவுக்கு போன் செய்து கடையில் இருந்து புகை வருவதாக கூறினார் .இதையடுத்து அவர் அங்கு சென்று கடையை திறந்து பார்த்தபோது ரூ.19 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.