மாணவி, இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – தந்தை, மாமா போக்சோவில் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது  இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அந்த மாணவியின் தந்தையை நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல சுல்தான்பேட்டை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு அவரது மாமா பாலியல் தொல்லை கொடுத்ததாராம். இது குறித்து சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது.இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் மாமாவை நேற்று கைது செய்தனர்..இவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..