காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை- கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி, புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (வயது 34 ) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி கற்பகம் ( வயது 32) ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள்இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் ஒருஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்து 8 மாதங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகம் மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் .கடந்த சில வாரமாக ஆறுமுகம் பொள்ளாச்சி பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு வந்தார். அப்போது கடந்த ஒரு வாரமாக தொப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். அங்கு மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழும் வற்புறுத்தினார். இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்தார்,.இதனால்இவர்களுக்கிடையே தகராறுஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவில் வேலை முடித்துவிட்டு தொப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு ஆறுமுகம் மீண்டும் சென்றார் .அப்போது மனைவியை குடும்ப நடத்த வருமாறு அழைத்தார்.அதற்கு கற்பகம் மறுத்தார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்தஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கற்பகத்தை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார் .இதில் படுகாயம் அடைந்த கற்பகம் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார் .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் ஆறுமுகத்தை தேடி வருகிறார்கள்.