இன்று மீண்டும் தொடங்கியது மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் போக்குவரத்து – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி
ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவால்
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை
அழகினை கண்டு ரசிக்கலாம்.

அடர் வனத்தின் நடுவேயும் காட்டாறுகளுக்கு மேல் அமைந்துள்ள உயர்மட்ட
பாலம், மலை குகைகளுக்குள் புகுந்து செல்லும் இந்த ரயிலின் இனிமையான
பயணத்தை அனுபவித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து
காத்திருந்து பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மலை ரயில் பாதை அமைந்துள்ள வன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததது. இதனால் கல்லாறு-ஹில்கிரோவ் மலை ரயில் பாதையில் மன்சரிவு ஏற்பட்டது. பாறைகள், மண் விழுந்து மலை ரயில் தன்டவாளங்கள்  சேதமடைந்தன இதனால் ரயில் போக்குவரத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் கடந்த 2 நாட்களாக நிறுத்தியது. தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து 2 நாட்கள் நடந்த சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது.
இந்தநிலையில் இன்று வழக்கம் போல் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து
குன்னூர் புறப்பட்டு சென்றது. காலை 7.40மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் புறப்பட்டு சென்றது. 2
நாட்களுக்கு பின் ரயில் இயக்கபட்டதால் முன்பதிவு செய்து காத்திருந்த
பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.