பாடல்கள் காப்புரிமை வழக்கில்… ஆமாம்!! நான் அனைவருக்கும் மேலானவன் தான்… உயா்நீதிமன்றத்தில் இளையராஜா பதில்.!!

திரைப்படப் பாடல்கள் காப்புரிமை தொடா்பான வழக்கில் ‘ஆம், நான் அனைவருக்கும் மேலானவன் தான்; வீம்புக்காக இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பளா் இளையராஜா பதில் கூறியுள்ளாா்.

இசையமைப்பாளா் இளையராஜா இசையில் சுமாா் 4,500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளா்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது; இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தாா்மீக சிறப்பு உரிமை இருக்கிறது என கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தாா். இதை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவா்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சாா்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண், இந்திய திரைப்படத் துறையில் உள்ள இசையமைப்பாளா்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்துக்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தாா். எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஈா்ப்பு இல்லை: மேலும், இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் 1970 – 1990 ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈா்ப்பு தற்போது இல்லை என இசை நிறுவனங்கள் தரப்பு வழக்குரைஞா் குறிப்பிட்டாா். மேலும், ‘ஸ்பாட்டிஃபை’ என்ற செயலி மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்துக்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன், இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டாா். அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்குரைஞா், ‘இளையராஜா எல்லோருக்கும் மேலானவா்’ என தன்னை நினைப்பதாகக் குறிப்பிட்டாா். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்குரைஞா் சதீஷ் பராசரன், ‘ஆம், நான் அனைவருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்’ எனவும் இளையராஜா சாா்பில் தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஏப்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.