கோவையில் 68 போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது..!

கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர்களிடம் 68 போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரனையில் அவர்கள் திருமால் வீதியை சேர்ந்த ஷேக் மைதீன் ( வயது 33 )தெற்கு உக்கடம்,புல்லு காடு, முகமது நவாஸ் (வய.து 22) என்பவது தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது..