கோவையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கிறிஸ்தவ மத போதகர் கைது..!!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 53 ) இவருக்கு திருமணமாகி மனைவி. மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் .இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாய், தந்தை, வியாபாரம் தொடர்பாக வெளியே சென்று விட்டனர். இதனால் வீட்டில் சிறுமி மற்றும் அவருடைய தங்கைகள்,தம்பி, இருந்துள்ளனர். இந்த நிலையில் மத போதகர் ஸ்டீபன்ராஜ் அந்த 15வது சிறுமியை வீட்டின் வெளியே வரவழைத்தார். பின்னர் திடீரென்று சிறுமியின் தங்கை, தம்பியை வீட்டில் உள்ள அறையில் அடைத்து பூட்டினார்.பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர் ,அப்போது சிறுமி அழுது கொண்டே நடந்தது குறித்து அவர்களுடன் தெரிவித்தார். இதை யடுத்து பொதுமக்கள் ஸ்டீபன்ராஜை பிடித்து, தர்ம அடி கொடுத்து செட்டிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு போக்சோ தொடர்பான வழக்கு என்பதால் பேரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டீபன் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மத போதகர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.