செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் வைக்கப்பட்ட 55 நாட்டு வெடிகுண்டு பறிமுதல்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட  வனப்பகுதியில் 55 நாட்டு வெடிகுண்டு வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஜெய்சங்கர் என்ற நபரை  கைது செய்துள்ளனர்
 சாத்தனூர் வனச்சரகத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் அதிக அளவில் வனவிலங்குகளை வேட்டையாடப்பட்டு வருவதாக வனச்சரக அலுவலர் சீனுவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்  ரோந்து பணியில் ஈடுபட்ட போது வனப்பகுதியில் வைப்பட்ட நாட்டு வெடிகுண்டை நாய் ஒன்று கடித்ததில் நாய் முகம் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது
 இதனை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சீனுவாசன் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த குன்னியந்தல் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த 20 நாட்டு வெடிகுண்டு மற்றும் வனப்பகுதியில் புதைத்து வைத்திருந்த 35 நாட்டு வெடிகுண்டு என 55 நாட்டு வெடி குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்
மேலும் தப்பி ஓடிய சூர்யா என்ற இளைஞரை சாத்தனூர் வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்