பள்ளி, கல்லூரி அருகே பீடி, சிகரெட் விற்பனை – 3 பேர் கைது.!!

கோவை: பள்ளிக்கூடங்கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்றதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் ( வயது 26 ) கைது செய்யப்பட்டார். சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது . இதே போல உக்கடம் பெருமாள் கோவில் வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே உள்ள பெட்டிக்கடையில் பீடி சிகரெட், விற்றதாக ஜான் அபிலைஸ் ( வயது 38) கைது செய்யப்பட்டார். சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. டவுன்ஹால் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி அருகே உள்ள பெட்டி கடையில் சிகரெட் விற்றதாக சசிகுமார் ( வயது 38) கைது செய்யப்பட்டார். சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.