தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கா் நியமனம்..!

தேர்தலில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கா் நியமிக்கப்பட உள்ளாா்.
இதுதொடா்பாக தேர்தல் ஆணையத்துக்கும் சச்சினுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமாகவுள்ளது. இதையடுத்து, வரும் 3 ஆண்டுகளுக்கு வாக்காளா்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கா் ஈடுபட உள்ளாா். இது தொடா்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இளைஞா்களிடையே சச்சின் டெண்டுல்கரின் இணையற்ற தாக்கத்தைப் பயன்படுத்தி, 2024 மக்களவைத் தேர்தல் உள்பட வரவிருக்கும் தேர்தல்களில் வாக்காளா்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க பங்கை இந்த ஒத்துழைப்பு வழங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய கூட்டாண்மையின் மூலம், நகா்ப்புற மக்கள் மற்றும் இளைஞா்கள் வாக்களிப்பதில் காட்டும் அக்கறையின்மையைக் களையவும் தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது.

தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க வாக்காளா்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சோந்த புகழ்பெற்ற இந்தியா்களை தனது ‘தேசிய தூதா்’களாகத் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நடிகா் பங்கஜ் திரிபாதியை தேசிய தூதராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலின் போது, கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனி, நடிகா் அமீா் கான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் போன்ற பிரபலங்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதா்களாக இருந்தனா்.