கோவை நகை வியாபாரியிடம் ரூ 5.கோடி தங்கம் மோசடி: பட்டறை தொழிலாளி கைது – அதிபர் தலைமறைவு..

கோவை ஜூலை 10 ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகேஷ் ஜெயின் ( வயது 41 ) தங்க நகை வியாபாரி.இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார். சொக்கம்புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கோவை இடையர் வீதியில்நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதார் ( வயது 39 ) என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளாக நகை செய்வதற்கு தங்கம் கொடுத்து வருகிறார். அவர்கள் செய்து கொடுக்கும் நகைகளை மும்பையில் விற்பனை செய்கிறார் .மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதாரிடம் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அஜய் துல்லா ( வயது 20 )என்பவர் நகை தொழிலாளியாகவேலை பார்த்து வருகிறார் .கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மும்பையில் உள்ள ஒரு நகை கடையில் இருந்து 11 கிலோ 473 கிராம் தங்கக் கட்டிகளை வாங்கி நகை செய்வதற்காக சேக் சலாம் அலி ஜமீதார் மற்றும் அஜய் துல்லா ஆகியோரிடம் கொடுத்தார் .ஆனால் அவர்கள் 541 கிராம் தங்கத்துக்கு மட்டும் நகைகளை செய்து கொடுத்தனர் .பின்னர் அவர்கள் 2 பேரும் ரூ 5 கோடி மதிப்புள்ள 10 கிலோ 340 கிராம் தங்கத்துடன் எங்கோ தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து விக்னேஷ் ஜெயின் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நகை தொழிலாளி அஜய் துல்லா என்பவரை நேற்று கைது செய்தனர் அவரிடம் இருந்து 200 கிராம் நகைகளை மட்டும் போலீசார் மீட்டனர். நகை பட்டறை உரிமையாளர் சேக் சலாம் அலி ஜமேதாரை தேடி வருகிறார்கள்.. அவர் மேற்கு வங்காளத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அவரை பிடிக்க தனிப்படை மேற்கு வங்காளம் விரைந்து உள்ளது..